sri lanka
இலங்கைசெய்திகள்

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

Share

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பரிஸூக்கு வாரத்தில் 3 தினங்கள் விமான சேவையை நடத்தவுள்ளது.

அதன்படி வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் முற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மறுநாள் காலை 7.40 மணிக்கு பரிஸை சென்றடையும்.

மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...