world bank 20220162151
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு அவசியம்

Share
இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரில் இடம்பெற்ற ஜி 20  நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கையின் நிதி உத்தரவாதம், சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு ஆகிய தீர்வுகளை அடைய நாங்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்,  உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தும் செய்யப்படலாம் என்று தெரிவித்த அவர்,பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ஒரு செயல்முறையை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றார்.

பொது கட்டமைப்பின் குறைபாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அரச மற்றும் தனியார் கடன் வழங்குபவர்களின் வட்டமேசை மாநாடு சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரம்பரிய பணக்கார கடன் வழங்கும் நாடுகள், தனியார் கடனாளிகள் மற்றும் சீனாவை ஒன்றிணைத்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன்களை மறுசீரமைக்க ஜி 20 முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...