3 41
இலங்கைசெய்திகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

Share

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறீதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலை அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில், இதனை தடுக்க தற்போது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி தனக்கு நீதி கோரி அவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அவரது அரசியல் நிலைநிறுத்தப்படும்.

கட்சி தன்னை புணர்நிர்மாணம் செய்வதற்கும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மக்கள் போராட்டம் மட்டும் தான் அல்லது சட்ட ரீதியாக அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...