2 40
இலங்கைசெய்திகள்

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

Share

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்து சமயத்தையும் இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும்  இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமை கண்டனத்திற்குரியது.

இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளைப் பேசுபவருக்கெதிராக இலங்கைச் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

இதே போன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாகப் பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

ஜனாதிபதியோ இந்து கலாசார அமைச்சோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடுவோம்.

மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Grok AI 2026 01 dbbd0a954b45fe889f339d18532ac4dc 3x2 1
செய்திகள்உலகம்

Grok AI சர்ச்சை: சிறுவர்களின் ஆபாசப் படங்கள் விவகாரத்தில் ஈலான் மஸ்க் விளக்கம்!

தமது ‘எக்ஸ்’ (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சிறுவர்களின் தவறான படங்கள்...

image 870x 696670051e26f
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் அதிரடி முடிவு: 75 நாடுகளுக்கான குடியேற்ற விசாக்கள் ஜனவரி 21 முதல் நிறுத்தம்!

அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்கலைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத்...

sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...