3 41
இலங்கைசெய்திகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

Share

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறீதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலை அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில், இதனை தடுக்க தற்போது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி தனக்கு நீதி கோரி அவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அவரது அரசியல் நிலைநிறுத்தப்படும்.

கட்சி தன்னை புணர்நிர்மாணம் செய்வதற்கும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மக்கள் போராட்டம் மட்டும் தான் அல்லது சட்ட ரீதியாக அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...