WhatsApp Image 2022 03 02 at 3.02.05 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் தேசிய விலங்குக்கு காகம் பொருத்தம்! – மஹிந்தவுக்கு டிலான் பதிலடி

Share

நாடு நெருக்கடியில் இருக்கும்போது மக்களின் கோரிக்கை நாட்டின் தேசிய விலங்கை மாற்றுவது அல்ல, எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் சிஸ்டத்தை மாற்றுகிறோம் என ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் தேசிய விலங்கை மாற்றுவது பற்றி முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் பல இருக்கின்றன. எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வையே மக்கள் கோருகின்றனர். தேசிய விலங்கை மாற்ற வேண்டும் என்பதல்ல, மகிந்த அமரவீரவுக்கு மர அணிலை தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் இந்த நாட்களில் காகம் அதற்கு பொருத்தமாக இருக்கும் .

ஏனெனில் இன்று இந்த நாட்டின் ஆட்சியை நடத்துவதில் காகம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மக்களின் முக்கிய பிரச்சினை தேசிய விலங்கை மாற்றுவது அல்ல. மக்கள் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியை வழங்காததாலேயே ஆகும் .

ஊழலற்ற அனாவசிய அரச செலவினங்களை கட்டுப்படுத்தும் ஜனநாயக ரீதியான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று என்ன நடக்கிறது அதை விட மோசமான நிலையை நோக்கி நாடு நகர்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...