299962422 745741006923763 57982616078712092 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் மாவட்ட விவசாயத்துக்கான யூரியா உரங்கள் வந்தடைந்தன

Share

யாழ் மாவட்ட 2022/23 பெரும்போக விவசாயத்துக்காக முதல்கட்டமாக 200 தொன் லக்பொஹொர யூரியா உரங்கள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (16.08.2022) எடுத்துவரப்பட்டுள்ளன.

இவை நெல் மற்றும் சோளப்பயிர்ச்செய்கைக்காக மானிய அடிப்படையில் 1 ஹெக்டயருக்கு 100 கிலோகிராம் என்ற அடிப்படையில் 50 கிலோகிராம் உரப்பொதியொன்று 10,000 ரூபாய் எனும் விலையில் வழங்கப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 13,000 ஹெட்டேயர் நெற்பயிர்ச்செய்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1300 தொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 200 தொன் யூரியா உரங்கள் இன்று யாழ் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மிகுதி உரங்கள் பிரதேச ரீதியாக கமநல சேவைகள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

வடமாகாண, யாழ் மாவட்டத்துக்கான 2022/23 பெரும்போகத்துக்கான உரங்களை அனுப்பி வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (15.08.2022) நடைபெற்றிருந்தது.

40 தொன் வீதம் 5 கொள்கலன்களில் யாழ்ப்பாணம் கோண்டாவில் உரக்களஞ்சியத்துக்கு கொண்டுவரப்பட்ட யூரியா உரங்களை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், கையேற்று, கமநல சேவைகள் நிலைய அதிகாரிகளிடம் கையளித்தார்.

இதேவேளை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறி பயிர்களுக்கான உரங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் யாழ் மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

299847675 745740916923772 1603575853204558884 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...

Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...

சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...