Education 2
இலங்கைசெய்திகள்

மாணவர்கள் நலனை கருத்திற் கொண்டு ஒத்துழையுங்கள்

Share

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆகையால், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்  சுசில் பிரேம்ஜயந் கேட்டுக்கொண்டார்.

விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கைகளுக்காக 20,000 ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், 16,000 ஆசிரியர்களே இதுவரை அதற்காக பதிவு செய்துள்ளனர்.

மேலும் 4,000 ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவுகின்றது என்றார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்  எதிர்க்கட்சி எம்பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே   இவ்வாறு வேண்டுகோள் விடுத்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,

அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவிலிருந்து சுமார் இரண்டு மடங்காக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...