depositphotos 47582093 stock illustration warning stamp
இலங்கைசெய்திகள்

தொடர் மழை! – பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

Share

பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசியக் கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தேசியக் கட்டட ஆய்வு நிலையத்தின் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்துக்கு கடந்த 24 மணிநேரத்துக்குள் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் இந்தப் பகுதிகளில் மிகவும் ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...