WhatsApp Image 2021 09 12 at 09.28.19 1
இலங்கைசெய்திகள்

வண்ணமயமாகியது களனி பாலம் !!

Share

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன.

நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது,

நாட்டில் முதன்முதலில் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தின் இரு பகுதிகளையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் ;மற்றும் புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கங்கள் ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

k k1 k2 k3k4 k6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...