10 16
இலங்கைசெய்திகள்

சுமார் 2000 டன் சரக்குகள்! ரஷ்யாவில் தரை தட்டி விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல்: வீடியோ

Share

சுமார் 2000 டன் சரக்குகள்! ரஷ்யாவில் தரை தட்டி விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல்: வீடியோ

ரஷ்யாவின் தூர கிழக்கில் சீனாவின் சரக்கு கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சக்கலின்(Sakhalin) தீவு கடற்கரையில், நெவெல்ஸ்க்(Nevelsk) மாவட்டத்திற்கு அருகில், “ஆன் யாங் 2”(An Yang 2) என்ற சீன சரக்குக் கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ளூர் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கிரெம்ளின் ஊடகங்கள் உட்பட ரஷ்ய ஊடகங்கள் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளன.

கப்பலில் கணிசமாக 1,000 டன் நிலக்கரி, 700 டன் எரிபொருள் எண்ணெய் மற்றும் 100 டன் டீசல் ஆகிய சரக்குகள் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்பகுதி கடுமையான புயல் நிலவியதால் சீன சரக்கு கப்பல் தரை தட்டியதாக கூறப்படுகிறது.

கப்பலில் நிலக்கரி, எரிபொருள் எண்ணெய் மற்றும் மோட்டார் எண்ணெய் ஆகியவை இருந்ததாக பிராந்திய அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல் சரக்கு இருந்தபோதிலும், எரிபொருள் கசிவு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த அனைத்து 20 கப்பல் மாலுமிகளும் பத்திரமாக உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் மருத்துவ உதவி எதுவும் தேவைப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...