Rice
இலங்கைஅரசியல்செய்திகள்

அரிசியை இறக்குமதி செய்யப்போகும் சீனா!

Share

இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை  இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இறப்பர் -அரிசி வர்த்தக உடன்படிக்கை 2022 ஆம் ஆண்டில் 70 வருடங்களை பூர்த்தி செய்வதால் ஒரு மில்லியன் மெற்றித்தொன் அரிசியை இலவசமாக வழங்குமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கையை நிதியமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சீனத் தூதுவர் கோரியிருந்தார். அதற்கமைவாக வெளிவிவகார அமைச்சு கடிதம் மூலம் சீனத் தூதரகத்திடம் கோரிக்கையை சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....

pujitha 1
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு , உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு...