ஓய்வூதிய வயதெல்லை மாற்றம்

doctor

doctor

மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வுபெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன இந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளார். இதில் மருத்துவர்களின் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 63 வயதை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெறவேண்டும். 62 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் வைத்தியர்கள் தமது வயது 63 பூர்த்தியாகும் போது ஓய்வு பெறவேண்டும்.

3 ஆவது பிரிவின் கீழ் இதுவரையில் 61 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் 62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறவேண்டும். இதுவரையில் 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் தமது வயது 61 பூர்த்தியடையும்சூபாது ஓய்வு பெறவேண்டும்.

59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் தமது வயது 60 பூர்த்தியாகும் போது ஓய்வுபெற வேண்டும் என்று புதிய மறுசீரமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிறந்த தினத்தை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் குறித்த ஆண்டில் ஜூன் மாதம் 31 திகதி வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

#sriLankaNews

Exit mobile version