doctor
இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய வயதெல்லை மாற்றம்

Share

மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வுபெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன இந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளார். இதில் மருத்துவர்களின் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 63 வயதை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெறவேண்டும். 62 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் வைத்தியர்கள் தமது வயது 63 பூர்த்தியாகும் போது ஓய்வு பெறவேண்டும்.

3 ஆவது பிரிவின் கீழ் இதுவரையில் 61 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் 62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறவேண்டும். இதுவரையில் 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் தமது வயது 61 பூர்த்தியடையும்சூபாது ஓய்வு பெறவேண்டும்.

59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் தமது வயது 60 பூர்த்தியாகும் போது ஓய்வுபெற வேண்டும் என்று புதிய மறுசீரமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிறந்த தினத்தை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் குறித்த ஆண்டில் ஜூன் மாதம் 31 திகதி வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...