doctor
இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய வயதெல்லை மாற்றம்

Share

மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வுபெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன இந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளார். இதில் மருத்துவர்களின் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 63 வயதை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெறவேண்டும். 62 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் வைத்தியர்கள் தமது வயது 63 பூர்த்தியாகும் போது ஓய்வு பெறவேண்டும்.

3 ஆவது பிரிவின் கீழ் இதுவரையில் 61 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் 62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறவேண்டும். இதுவரையில் 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் தமது வயது 61 பூர்த்தியடையும்சூபாது ஓய்வு பெறவேண்டும்.

59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் தமது வயது 60 பூர்த்தியாகும் போது ஓய்வுபெற வேண்டும் என்று புதிய மறுசீரமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிறந்த தினத்தை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் குறித்த ஆண்டில் ஜூன் மாதம் 31 திகதி வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....