doctor
இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய வயதெல்லை மாற்றம்

Share

மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வுபெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன இந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளார். இதில் மருத்துவர்களின் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 63 வயதை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெறவேண்டும். 62 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் வைத்தியர்கள் தமது வயது 63 பூர்த்தியாகும் போது ஓய்வு பெறவேண்டும்.

3 ஆவது பிரிவின் கீழ் இதுவரையில் 61 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் 62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறவேண்டும். இதுவரையில் 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் தமது வயது 61 பூர்த்தியடையும்சூபாது ஓய்வு பெறவேண்டும்.

59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்கள் தமது வயது 60 பூர்த்தியாகும் போது ஓய்வுபெற வேண்டும் என்று புதிய மறுசீரமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிறந்த தினத்தை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் குறித்த ஆண்டில் ஜூன் மாதம் 31 திகதி வரை பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bus driver
இலங்கை

கடமை நேரத்தில் உயிரிழந்த சாரதி – யாழில் அதிர்ச்சி சம்பவம்.

நேற்று யாழில், புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ள தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர்...

கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...