கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைத்தடுப்பு பொலிஸார், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் அழிக்கப்பட்டுள்ளன.
.

