liquore3 1586427072
இலங்கைசெய்திகள்

மதுபான விநியோக நடைமுறையில் மாற்றம்!

Share

தேசிய ரீதியாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கலால் திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தி வருவதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளாா்.

அவ்வாறு பாதுகாப்பு ஸ்டிக்கா் கொண்ட மதுபானம் சந்தைக்கு வருவதற்கு முன்னா் சந்தையில் இருக்கும் மதுபான தொகை முடிவடையவுள்ளதாகவும் அதற்காக மூன்று மாத காலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஏப்ரல் முதலாம் திகதியாகும்போது, சந்தைகளிலுள்ள அனைத்து மதுபான கையிருப்புகளிலும் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பொருத்தப்படும். தற்போதவரையில் ஒரு வருடமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களில் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உள்ளூர் சந்தைக்குள் நுழைவதை தடுப்பதற்காகவும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் உள்ளூர் சந்தைக்குள் வருவதை தடுக்கவும் இந்த பாதுகாப்பான முத்திரைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினாா்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...