WhatsApp Image 2022 03 24 at 10.22.50 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை கூட்டுறவு சங்கம் கையூட்டு பெறுகின்றது – அங்கத்தவர்கள் குற்றச்சாட்டு!

Share

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கையூட்டு பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அங்கத்தவர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களாக நீண்ட காலமாக உள்ளோம்.

எமது தொழிலை நேர்த்தியாக செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் எமக்கான அனுமதிப்பத்திரங்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. இந்த அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பகுதி ப.தெ.வ.அ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாகவே அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த அனுமதிப்பத்திரங்களை எமக்கு வழங்கும் போது கடந்த காலங்களில் சங்கத்தால் 250 ரூபா எம்மிடமிருந்து கையூட்டாக பெறப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு அங்கத்தவர்களிடமிருந்தும் 400 ரூபா இவ்வாறு பெறப்பட்ட பின்னரே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அனுமதிப்பத்திரங்களானது எமக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு சென்று அங்கு நாங்கள் வழங்கும் பணத்திற்கு பற்றுச்சீட்டு கேட்டபொழுது பற்றுச்சீட்டு தர முடியாது என்று அவர்கள் மறுக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு எமக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பான தகவலைப் பெறுவதற்கு, சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கத்தின் பொது முகாமையாளர் திரு.செ.சுரேஷ்குமார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இது தொடர்பாக தொலைபேசியில் வினவ முயன்றபோது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு அனுமதிக்காமல் “மதுவரி திணைக்களம்தான் அனுமதிப்பத்திரம் வழங்குகின்றது. இது தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருடன் பேசுங்கள்.

உங்களுக்கு தகவல் தேவை என்றால் எழுத்து மூலமாக என்னிடம் கோருங்கள்” எனக்கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். மீண்டும் அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவேளை மறுமுனையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை. – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...