Sankanai 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீட்டை ஏற்க முடியாது: கொதித்துப்போன வியாபாரிகள்

Share

சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாகப் பாதிப்படைந்ததுள்ளது.

திடீர் வரியேற்றம் மற்றும் பிரதேச சபையினர் உள்ளக சுற்றுப்புறத்தைக் கண்காணிக்காமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sankanai 04

இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள்,

எமது சந்தையிலிருந்து கொரோனா நிலைமையின் காரணமாக வெற்றிலை மற்றும் பழக்கடை என்பவற்றினை பழைய மீன் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

தற்போதைய நிலைமையில் பிரதேச சபையினர் எமது இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக பிரதேச சபையின் அனுமதியுடன் குத்தகையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

Sankanai 05

எங்களுக்கு இந்த இடத்தினை மாற்றம் செய்து புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று சுகாதாரப் பகுதியினர் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு ஏற்ற வகையில் எங்களை புதிய இடங்களுக்கு அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Sankanai 02

மேலும், பிரதேச சபையினர் தற்போது உள்ள இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீடு செய்கின்றனர்.

இதனால் தற்போது பாதுகாப்பற்ற தரமற்ற கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தில்தான் எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்றும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Mathakal Protest 02

நுளம்பு, வெயில் ஆகியவற்றால் மிகவும் கடும் அவதிப்படுகிறோம். குறித்த பிரதேசம் துர்நாற்றம் வீசுகின்றமையால் மக்கள் குறித்த இடங்களுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மந்த நிலை காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...