23 649c2e88636d9
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் கூடிய அமைச்சரவை – மறுசீரமைப்பு யோசனைக்கு அனுமதி

Share

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்ததையடுத்து, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு

இதன்போதே, கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அதிபருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொது நிதி குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினமே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...