23 649c2e88636d9
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் கூடிய அமைச்சரவை – மறுசீரமைப்பு யோசனைக்கு அனுமதி

Share

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்ததையடுத்து, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு

இதன்போதே, கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அதிபருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொது நிதி குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினமே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...