murder 178678
இலங்கைசெய்திகள்

கொடூரமாக மனைவி வெட்டிக் கொலை! – கணவன் கைது

Share

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் களுத்துறை புளத்சிங்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது–54) என்ற பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன் படுகொலையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...