சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி – முட்டை இறக்குமதிக்கு தடை!!

Share

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தொழில்நுட்ப அனுமதி வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

சுகாதார ஆலோசனைக் குழு அறிக்கையின்படி, ஒக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை ஐரோப்பாவில் 2,500 பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, மேலும் 2006 முதல் அவ்வப்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 ஒக்டோபர் 16 அன்று, இந்தியாவின் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பதிவாகியிருந்த நிலையில், அங்கு பறவைக்காய்ச்சல் அவ்வப்போது பதிவாகி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மனிதாபிமானப் பிரச்சினையாக கருதி முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என திணைக்களத்தின் கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...