speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்! – அறிக்கை கோருகிறார் சபாநாயகர்

Share

நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.

முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் எனவும், முடிந்தால் அதே வாரம் அல்லது 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த அவர், அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்ட நடத்துவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சபாநாயகரை அவசரமாக சபைக்கு வருமாறும் எதிரணி சபையில் கோரியது . அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் எதிரணி கோரியது.இதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...