Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது தாக்குதல்! – வரலாற்றில் பதிவான மோசமான சம்பவம்

Share

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பஸ்களில் பூட்டிவைத்து, பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் இந்த சபையில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வரலாற்றில் பதிவான மிகவும் கேவலமான சம்பவமாக இது பதிவாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர்கள் வருகை தந்த பஸ்ஸை தடுத்து, அவர்களை பஸ்களுக்குள்ளேயே பூட்டி வைத்து மிகவும் கேவலமாக நடந்துகொண்டுள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி முற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். உதைத்துள்ளனர். பெண்களை எப்படி ஆண் மருத்துவர் சோதிக்க முடியும். எனவே, மிகவும் கேவலமாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நிலையை அன்று நாம் எதிர்கொண்டோம். பிரபாகரன் காலத்தில் இப்படி நடக்கவில்லை, பட்டினியில் எவரும் சாகவில்லை என சிங்கள மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது.” – என்றார் சிறிதரன் எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...