8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மாகாணங்களிடையே பயணத்தடை நீக்கம்

Share

கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளாக ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அழைத்து செல்லப்பட வேண்டும் எனவும் சாரதி, நடத்துநர் ஆகியோர் கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் சேவைகளும் நாளைமுதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...