24 66222020efd97
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – தந்தையின் கோரிக்கை

Share

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் – தந்தையின் கோரிக்கை

கட்டாருக்கு தொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தந்தை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பொல்பித்திகம பிரதேசத்தில் இருந்து புதிய வீடு கட்டும் கனவை நிறைவேற்ற கட்டார் சென்ற இளைஞன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி காலை புத்தாண்டு தினத்தன்று கிடைத்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

எனது மகனின் சடலத்தை எனது கண்களால் பார்க்கும் வரை என்னால் அதனை நம்ப முடியாது. எனது மகனின் சடலத்தை கொண்டு வர உதவுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

27 வயதான ஜனக சதுரங்க செனவிரத்ன என்ற இளைஞன் இலத்திரனியல் வேலைக்காக கட்டார் சென்றுள்ளார்.

எங்கள் குடும்பத்தில் 3 பிள்ளைகள். மூத்த மகனே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். என் மகன் இதற்கு முன்னரும் வெளிநாட்டில் பணியாற்றினார்.

பின்னர் கடந்த ஆண்டு இலங்கையில் வேலை இல்லாததால் கட்டாருக்கு சென்றார். நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் மிகுதி வேலைகளை முடிக்க பணத்தைத் தேடிய பின்னர் நாட்டிற்கு வருவதாக கூறினார்.

இறுதியாக 12ஆம் திகதி தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென எவ்வித சத்தமும் கேட்டாமல் போனதாக காதலி கூறினார்.

சார்ஜரில் கையடக்க தொலைபேசியை பொருத்திய நிலையில் தொலைபேசியில் பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர் ஒருவர் 13ஆம் திகதி கூறினார்.

மின்சாரம் தாக்கியிருந்தால் கையடக்க தொலைபேசி எரிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகன் உயிரிழந்துள்ளதாக இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...