photo 88 scaled
இலங்கைசெய்திகள்

‘மது கொத்தணி’ – மக்கள் அச்சம்!

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாது முண்டியடித்துக் கொண்டு மது வாங்க மதுபானசாலைகள் முன் திரள்கின்றனர்.

மக்களின் இந்த செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மதுபான கொரோனாக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மதுபானசாலைகளில் கடமையில் இருக்கும் பொலிஸார் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றுமாறு கட்டளை இட்டும் பொதுமக்கள் அவற்றை கடைப்பிடிக்காது செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுக்கடைகள் திறக்க அரசால் எடுக்கப்பட்ட இது தீர்மானமானது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன,

Photo 1 44444

photos 5

photo 77

photo 5

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...