கொழும்பு - அபுதாபி குறைந்த கட்டண விமான சேவை!
இலங்கைசெய்திகள்

கொழும்பு – அபுதாபி குறைந்த கட்டண விமான சேவை!

Share

கொழும்பு – அபுதாபி குறைந்த கட்டண விமான சேவை!

இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த விமான கட்டண சேவையை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த வெளிநாட்டு விமானச் சேவையை செயற்படுத்துவதற்காக சான்றிதழ் நேற்று (03.08.2023) கட்டுநாயக்கவில் AIR ABUDHABI விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளைப் பேணுவதற்கு விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் வேலைத்திட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்கான பௌதீக வளங்கள், முறையான பயிற்சி, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவை தொடர்பிலான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் விமான தரைச் செயற்பாட்டுப் பிரிவின் சிவில் விமானப் போக்குவரத்துப் பரிசோதகர்கள், விமானச் செயற்பாடுகளுக்குத் தேவையான பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் பௌதீகத் திறன் குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.

இதற்கமைய குறித்த ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தனது விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...