WhatsApp Image 2022 07 23 at 2.54.17 PM
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துக! – ஜனாதிபதி பணிப்புரை

Share

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வழக்கமான மற்றும் விரைவான எரிபொருள் விநியோகம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இ.போ.ச. டிப்போக்களிலிருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முன்னைய முறைமையின்படி, மீன்பிடி, சுற்றுலா, உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கும், பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் இ.போ.ச. ஊடாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களிலும் எரிபொருளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான சோதனைகளை விரிவுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறையை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் எரிபொருள் கொள்வனவு மற்றும் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சு மற்றும் அரச வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...