202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோப்பாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Share

கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் கோப்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் ஆனந்தபுரப் பகுதியில் 25 வயதுடைய இளைஞன் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த போதைப்பொருளை பாவித்து வருவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாது உள்ளதாகவும் ஆனந்தபுரப் பகுதியிலேயே தான் போதைப்பொருளை காசு கொடுத்து பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...