tamilni 85 scaled
இலங்கைசெய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு பட்டுள்ள மூன்று இலங்கையர்களை உடன் இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு மாநில அரசு நீதிமன்றததில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு இலங்கையர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டவை விதிக்கப்பட்டனர். பின்னர் சோனியா காந்தியின் சம்மதத்துடன் அவர்களுக்கான தண்டனை, பின்னர் ஆயுட்தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆயுள் தண்டனைக்காலம் முடிவுற்று சிறையில் இருந்து விடுதலையான பின்னர் நான்கு இலங்கைத் தமிழர்களையும் நாடுகடத்தப் போவதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது எனினும் விடுவிக்கப்பட்ட கைதிகளான சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு சிறப்பு மறுவாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதனை எதிர்த்து விடுவிக்கப்பட்ட கைதிகளும் அதற்கான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தங்களை இலங்கைக்கு அனுப்புமாறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் மத்திய அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகள் காரணமாக சாந்தன் , தமிழ்நாட்டிலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலம் மட்டுமே இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சியுள்ள மூன்று இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை உடனடியாக நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தற்போதைக்கு இவர்கள் மூவரும் திருச்சி மறுவாழ்வு முகாமில் தமிழக அரசின் நிவாரண உதவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த மூன்று பேரும் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் அவர்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...