யாழில் இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் அதிரடி இடமாற்றம்!

இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் e1652006548360

யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிஸ் பிரிவுகளுக்கு இ டமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10 ஆயிரம் ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட 10 ஆயிரம் பணத்தைத் திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரதேசங்களில் இலஞ்சம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version