25 6
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

Share

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம், பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் இலங்கையுடனான தனது நாட்டின் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பின் ஒரு பகுதியாக, உயர்ஸ்தானிகர் அஜீஸ், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் வாழ்த்துக் கடிதத்தை இலங்கை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பாகிஸ்தானிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையுடனான அதன் நெருங்கிய உறவுகளை ஆழமாக மதிக்கிறது. அத்துடன், இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜனாதிபதி சர்தாரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...