8 37
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகையாக இது கருதப்படுகிறது, இதன் பெறுமதி 43,646,800 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பு சேவை அதிகாரியாக கடமையாற்றி வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இன்று காலை 09.35 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் கீரின் செனல் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான நடத்தை காரணமாக சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டு இரண்டு பைகளில் 43 கிலோகிராம் 648 கிராம் குஷ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...