10 29
இலங்கைசெய்திகள்

யாழில் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் இழிவான செயல்

Share

யாழில் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் இழிவான செயல்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆண் காவல்துறை உத்தியோகஸ்தரை தவறான முறைக்குட்படுத்த முயன்ற காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த காவல்நிலையத்தில் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவருடன் தவறான சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதனை அவர் தடுத்து எச்சரித்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, காவல்நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு காவல்துறை உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி தவறான முறைக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இது தொடர்பில் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.

தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், காவல்துறை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...