16 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

Share

ஜனாதிபதி தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

2024 இல் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு 109.00 (நூற்று ஒன்பது ரூபாய்) தொகையைச் செலவிட முடியும் என்ற விடயம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1,868,298,586.00 (ஒரு பில்லியன், எண்ணூற்று அறுபத்தெட்டு மில்லியன், இருநூற்று தொண்ணூற்று எட்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தி ஆறு ரூபாய்) மட்டுமே என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இந்த தொகை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்பாளர்கள், தேர்தல் ஆணையகத்திடம் கோரியிருந்தனர்.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரு வாக்காளருக்கு 250 ரூபாயையும், நாமல் ராஜபக்ச வாக்காளர் ஒருவருக்கு 300 ரூபாயையும், அனுரகுமார திசாநாயக்க 200 ரூபாயையும் கோரியிருந்தனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...