18 16
இலங்கைசெய்திகள்

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

Share

கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச,பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேற்று (19) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் குறித்த நோக்கத்திற்காக ஒரு சுயாதீன நீதித்துறை ஆணையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடினர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது அவர் தரப்பில் எவரும் இன்று கர்தினாலை சந்திக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...