24 65ff957428315
இலங்கைசெய்திகள்

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு

Share

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 8 ஆம் திகதி இந்திய அரசு பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.

இதற்கயைம, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷுக்கு இந்தியா 64,400 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்திருந்தது.

இந்நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளமை சில நாடுகளின் சந்தைகளில் வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...