image 54a5383ce7
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்களுக்கு மறியல்!

Share

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று (07) திங்கட்கிழமை மதியம் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சனிக்கிழமை (05) இரவு 2 படகையும் அதில் இருந்த சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 14 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(6) மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மீனவர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சிறுவன் உட்பட 14 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை (7) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...