image facbdb6c69
இலங்கைசெய்திகள்

ஹரக் கடாவை அழைத்து வர டுபாய் செல்கிறது CID குழு!

Share

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய், செல்லவுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தல் சட்டத்தின் கீழ், 30 நாட்களுக்குள், ‘ஹரக் கடா’ என்ற நிழல் உலக தாதாவை இலங்கைக்கு அழைத்துவரும் நோக்கியேலே அதிகாரிகள் குழு அங்கு செல்கின்றது.

டுபாய் சர்வதேச பொலிஸ் பிரிவு, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சு, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன ‘ஹரக்கடாவை’ இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன.

ஹரக் கட்டா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கையின் இன்டர்போல் கிளைக்கு அந்நாட்டின் சர்வதேச பொலிஸ் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ், டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், இதற்கு முன்னர் துபாய் சர்வதேச பொலிஸ் பிரிவின் அறிவித்தலுடன் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் மாகந்துரே மதுஷும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...