இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
காணாமல் போன 82 பேரையும் தேடும் பணிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாலும், மண்சரிவு அபாயம் நிலவுவதாலும் மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏனைய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.