அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் வடக்கு, கிழக்குக்காவது உதவவேண்டும்! – மொட்டுக் கட்சி வலியுறுத்து

300055825 452913076850341 6113938075727118486 n
Share

“தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ‘மொட்டு’க் கட்சி எம்பியான ஜகத் குமார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிய ஆய்வுகளின் பின்னரே, சில அமைப்புக்கள் மற்றும் நபர்களைத் தடைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையைப் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில் எவ்வித தவறும் கிடையாது. நாம் உலகுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்த பட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம். சிலவேளை, அந்த அமைப்புக்கள் எமது நாட்டுக்கு, சட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டால் மீண்டும் தடை செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் உள்ளன – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...