காஞ்சன விஜேசேகர
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பிக்க விரும்பினால் அமைச்சுப் பதவியை ஒப்படைக்கத் தயார்! – காஞ்சன அதிரடி

Share

“நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க விரும்பினால் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சுப் பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் தயார்” என்று மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே இந்த அமைச்சுப் பதவியை சம்பிக்க ரணவக்க வகித்துள்ளார். அவருக்கு அனுபவம் உள்ளது. எனவே, அவர் முன்வந்தால் அமைச்சுப் பதவியைக் கையளிக்க நான் தயார். எமக்குப் பதவி முக்கியம் அல்ல. நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதே முக்கியம்.

இதற்காக அரசியல் பேதங்களை மறந்து இணைந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை வரவேற்கின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...