point pedro
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரு. வைத்தியசாலை நீர் விநியோக தடை! – பதில் வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டது சம்பந்தமாக ஊடகமொன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பான விளக்கம் ஒன்றை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நேற்றைய செய்தியில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் நீர் விநியோகம் தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் என்ற வகையில் ஊடகங்களுக்கு விளக்கம் ஒனறை அளிக்க விரும்புகின்றேன்.

நேற்று பிற்பகல் நீர்த்தாங்கிக்கு நீரைச் செலுத்துகின்ற கிணற்றினுள் நீருக்குள் காணப்படுகின்ற மோட்டர் திடீரென பழுதடைந்துவிட்டது. எங்களது வைத்தியசாலையின் இயந்திரப்பகுதி ஊழியர்கள் கிணற்றிலிருந்து அம் மோட்டரை வெளியே எடுத்து அதனைப் பரிசோதித்தபோது அதனை உடனடியாக மீள இயக்க முடியாமலிருந்தது.

இதன் காரணமாக இன்னொரு பதிலீட்டு மோட்டரை கிணற்றினுள் இறக்கி பொருத்த முற்பட்டபோது கிணற்றினுள் இருந்த நீர்க்குழாயுடன் அது பொருந்தவில்லை. பின்னர் அதற்குரிய மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.

எமது வைத்தியசாலை ஊழியர்கள் அதிகாலை 2 மணிவரை திருத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகம் சீராக்கப்பட்டது.

எமது வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதடையவில்லை. சீரான மின் விநியோகம் மின்சார சபையினால் வழங்கப்படுகின்றது.

எமது வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலுள்ள சேமிப்பு நீர் முடிவடைந்த பின்னரே நீர் விநியோகம் தடைப்பட்டது.

நாம் உடனடியாக நீர் விநியோகத்தை சீராக்குவதற்குரிய முயற்சியை ஆரம்பித்து அதிகாலை 02 மணியளவில் நீர் விநியோகம் சீராக்கப்பட்டது – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...