கூாிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடும்பஸ்தர் கூாிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை!

Share

கூரிய ஆயுதத்தால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை, 13 ஆவது ஒழுங்கைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவ – வெல்லத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் காலி, ஹல்விடிகல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...