sathiyamoorthy
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

Share

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனாவில் 17 சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றது. கோம்பையன் மயானத்தில் மின்தகனம் செய்யும் வசதிகள் காணப்படினும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 17 சடலங்களில் 4 சடலங்களை அநுராதபுரத்தில் மின்தகனம் செய்வதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. ஆனால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போதைய ஊரடங்கு காலத்தில் அநுராதபுரம் செல்வது தொடர்பில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்நிலை ஏற்படாத வண்ணம் அநுராதபுரத்தில் எரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...