sathiyamoorthy
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

Share

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனாவில் 17 சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றது. கோம்பையன் மயானத்தில் மின்தகனம் செய்யும் வசதிகள் காணப்படினும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 17 சடலங்களில் 4 சடலங்களை அநுராதபுரத்தில் மின்தகனம் செய்வதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. ஆனால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போதைய ஊரடங்கு காலத்தில் அநுராதபுரம் செல்வது தொடர்பில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்நிலை ஏற்படாத வண்ணம் அநுராதபுரத்தில் எரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...