image 5e06828c29
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றப் பகுதியில் மோதல்! – 42 பேர் காயம்

Share

நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கவும், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப்பட்டது.

அதேவேளை, காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்த ரி- 56 ரக துப்பாக்கியொன்றும், 60 தோட்டாக்களுடன் இரு மகசின்கள் காணாமல்போயுள்ளன.

இதுகுறித்து பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...