ranil mp
அரசியல்இலங்கைசெய்திகள்

அத்துகோரள கொலை! – சாணக்கியன் ஏற்கின்றாரா?

Share

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனுமதிக்கின்றாரா?”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியதுடன், சாணக்கியனின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்ததாலேயே, அரசியல்வாதிகளின் வீடுகள் எரியூட்டப்பட்டன.” என்று மே 20 ஆம் திகதி சாணக்கியன் உரையாற்றியுள்ளார்.

வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் அவர் உரையாற்றிய விதம், ஏற்புடையது அல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்குள், சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு, தமது கருத்தை மீளப்பெற வேண்டும். இல்லையேல், அது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.” எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...