76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் பஸில்! – காலி முகத்திடலில் மே தின கொண்டாட்டம்

Share

அரசுக்கான மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதென எதிரணிகள் அறிவிப்பு விடுத்துவரும் நிலையில், மக்கள் படை தம்முடன்தான் உள்ளது என்பதை காண்பிக்கும் விதத்திலான கூட்டமொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடத்தவுள்ளது.

இதற்காக மே தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளில் கொழும்பு, காலி முகத்திடலில் பெருமெடுப்பில் மே தினக் கூட்டத்தை மொட்டு கட்சி ஸ்தாபகரான நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் . இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுவருகின்றன.

குறித்த மே தின கூட்டத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளாட்சிமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜுன் மாதம் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...