Chemical fertilizer
செய்திகள்இலங்கை

இரசாயன உரத் தடை – ஜனாதிபதிக்கு கடிதம்

Share

இரசாயன உரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இரசாயன உரங்களுக்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த கடிதத்தில் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாய நடவடிக்கைகளுக்காக இராசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நாட்டுக்குத் தேவையான சேதனப்பசளைகள் இன்றி விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...