Chemical fertilizer
செய்திகள்இலங்கை

இரசாயன உரத் தடை – ஜனாதிபதிக்கு கடிதம்

Share

இரசாயன உரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இரசாயன உரங்களுக்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த கடிதத்தில் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாய நடவடிக்கைகளுக்காக இராசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நாட்டுக்குத் தேவையான சேதனப்பசளைகள் இன்றி விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...